இயக்குனர் பிரேம் குமார் இயக்கவிருக்கும் புதுப்படம் ஒன்றில் விஜய் சேதுபதியுடன் த்ரிஷா ஜோடி சேரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கவிருக்கும் புதுப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளனர். இது குறித்து இயக்குனர் பிரேம் கூறிய கதைக்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்ததாகவும், மேலும் அவருக்கு அடித்தடுத்த படங்கள் இருப்பதால், விஜய் சேதிபதியின் தேதிக்காக வெயிட்டிங்கில் உள்ளதாக கூறப்படுகிறது.
நந்தகோபால் தயாரிக்கவிருக்கும் இப்படம் வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகவிருப்பதாகவும், த்ரிஷாவுக்கு வலுவான கதாப்பாத்திரம் இருப்பதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய வரைவில் இப்படத்தின் உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை எதிர்பார்க்கலாம்.