Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருது கிடைக்கும் என்பதற்காக நடிக்கவில்லை…. விஜய் சேதுபதி கருத்து!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:18 IST)
நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேசிய விருதினை பெறுகிறார்.

2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த பாத்திரத்துக்காக இந்த ஆண்டு அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இதை வாங்க டெல்லி சென்றுள்ள விஜய் சேதுபதி அங்கே அளித்துள்ள பேட்டியில் இந்த பாத்திரத்துக்கு விருது கிடைக்கும் என்று நம்பி நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘இது முழுக்க முழுக்க இயக்குனரை நம்பி நான் ஏற்றுக்கொண்ட பாத்திரம். எனவே இந்த நேரத்தில் அவருக்குதான் நன்றி சொல்லவேண்டும். விருது பெறுவது புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. விருதை விட பல மொழி பேசும் கலைஞர்களை சந்தித்ததுதான் மகிழ்ச்சியாக உள்ளது. பிற மொழிக் கலைஞர்கள் என் படத்தை பார்த்ததாக சொன்னது மிகுந்த மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments