அரவிந்தசாமி, அருண்விஜய்யை அடுத்து விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக்

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (18:50 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் முதல்முறையாக நான்கு முன்னணி நடிகர்கள், மூன்று முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்களில் அரவிந்தசாமி, அருண்விஜய் ஆகியோர்களின் ஃபர்ஸ்ட்லுக் தோற்றங்கள் மற்றும் அவர்களுடைய கேரக்டர்களின் பெயர்கள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்த நிலையில் சற்றுமுன் விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது.
 
விஜய்சேதுபதி இந்த படத்தில் ரசூல் என்ற கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அரவிந்தசாமி 'வர்தன்' என்ற கேரக்டரிலும், அருண்விஜய், 'தியாகு' என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை சிம்புவின் கேரக்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது.
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments