Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் புதிய படம் - பண்ணையாரும் பத்மினியும் அருண் குமார் இயக்குகிறார்

விஜய் சேதுபதியின் புதிய படம் - பண்ணையாரும் பத்மினியும் அருண் குமார் இயக்குகிறார்
, ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (10:20 IST)
பண்ணையாரும் பத்மினியும் பாக்ஸ் ஆபிஸில் சுமாராகப் போனாலும் அந்தப் படத்தின் மீதும், அதனை இயக்கிய அருண் குமார் மீதும் விஜய் சேதுபதிக்கு தனிப்பாசம். அடுத்த வாய்ப்பையும் அருண் குமாருக்கு அவரே அளித்துள்ளார்.
 
விஜய் சேதுபதி நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய், இடம் பொருள் ஏவல், புறம்போக்கு ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. நானும் ரவுடிதான் படம் அண்டர் புரொடக்ஷனில் உள்ளது. அதையடுத்து அருண் குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு போலீஸ் வேடம் என கூறப்படுகிறது.
 
விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil