Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புலிக்காக உயிரைவிட்ட ரசிகரின் அம்மாவை கட்டியணைத்து அழுத விஜய்

புலிக்காக உயிரைவிட்ட ரசிகரின் அம்மாவை கட்டியணைத்து அழுத விஜய்
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (12:50 IST)
கடந்த ஒன்றாம் தேதி புலி வெளியான அன்று, படத்தைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற தாம்பரம் மணிமங்கலத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சௌந்தர்ராஜன், உதயகுமார் இருவரும், லாரி மோதி உயிரிழந்தனர். 


 

 
இந்த சம்பவத்தை அறிந்த விஜய், இன்று காலை உயிரிழந்த இரு ரசிகர்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் பெற்றேnர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர்கள் விஜய்யை கட்டியணைத்து கதறி அழ, விஜய்யும் கண்கலங்கினார்.

webdunia

 

 
இறந்துபோன இரு ரசிகர்களின் குடும்பத்துக்கும் விஜய் பண உதவி செய்தார். மேலும், அந்தக் குடும்பத்துக்கு எந்த உதவி தேவையெனிலும் தன்னை தொடர்பு கொள்ளும்படியும், அவர்களுக்கு உதவுவது தனது கடமை எனவும் விஜய் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil