கத்தி படத்தின் வெற்றி விழாவை நெல்லையில் பிரமாண்டமாக நடத்தினர். இதில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்தார் விஜய். அங்கிருந்து நெல்லைக்கு காரில் பயணித்த அவரை ரசிகர்கள் கார்களிலும், மோட்டர் சைக்கிளிலும் பின்தொடர்ந்தனர்.
அப்போது இசக்கிமுத்து, சுந்தர் என்ற இரு ரசிகர்கள் வந்த மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானது. அதில் இருவருமே படுகாயமடைந்தனர். உடன் வந்த மற்ற ரசிகர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றனர். தற்போது இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.