Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்காக படப்பிடிப்புத் தளத்தைவிட்டு வெளியே வந்த விஜய்

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (15:18 IST)
தன்னுடைய ரசிகர்களைப் பார்ப்பதற்காக படப்பிடிப்புத் தளத்தைவிட்டு வெளியே வந்துள்ளார் விஜய். 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த இரண்டு நாட்களாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகிறது.
 
தற்போது படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் சங்கம் அனுமதி மறுத்துள்ளது. ஆனாலும், அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இருந்தாலும், இந்த விஷயம் விமர்சனத்துக்கு உள்ளானதால், படப்பிடிப்பு நடக்கும் இடம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
எனவே, நேற்று விக்டோரியா ஹால் முன்பு ஏராளமான விஜய் ரசிகர்கள் திரண்டனர். நீண்ட நேரமாக அவர்கள் வாசலிலேயே காத்திருப்பதைத் தெரிந்துகொண்ட விஜய், வெயிலில் அவர்கள் வாடுவதைக் கேள்விப்பட்டு படப்பிடிப்புத் தளத்தைவிட்டு வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். தங்கள் ஹீரோவைக்  கண்ட மகிழ்ச்சியில் அவர்கள் ஆராவாரம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments