Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கில் விஜய் ஆண்டனி என்ன செய்கிறார் தெரியுமா? உருவாகிறது பார்ட் 2 திரைக்கதை !

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (14:55 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி வருகிறார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

அதன் பின் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா லாக் டவுனில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறார். இது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments