இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிக்கும் படத்திற்கு ஆர்.கே.நகர் என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்.
சென்னை 28, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். அந்தப் படத்தை செய்திகள்தான் வெளிவந்து கொண்டிருந்ததே தவிர, தலைப்பு உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அந்த படத்திற்கு ஆர்.கே.நகர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபகால தமிழக அரசியலில் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஆர்.கே.நகரையே தன் படத்திற்கு தலைப்பாக தேர்ந்தெடுத்துள்ளார் வெங்கட்பிரபு.
இப்படத்தை வடகறி படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்குகிறார். இதில் வைபவ், சம்பத் மற்றும் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். அரசியல் களத்தை மையமாக கொண்ட இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.