Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, தனுஷ்க்காக எழுதியதா ‘கோட்’ திரைப்படத்தின் கதை… இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:35 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் இன்னும் 3 தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் இன்னும் 3 தினங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்பதிவு தொடங்கியது. விஜய் படத்தை முதல் நாள் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்ற காரணத்தால் பல திரையரங்குகளும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் டிக்கெட் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆன்லைனிலேயே விற்பனை நடக்கிறது.

இந்நிலையில் படம் சம்மந்தமாக ஒரு நேர்காணலில் பேசும் இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல் கவனம் பெற்றுள்ளது. அதில் “கோட் திரைப்படத்தின் கதையை முதலில் ரஜினி மற்றும் தனுஷ் ஆகிய இருவரை மனதில் வைத்துதான் எழுதினேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?

ரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் விஜய்யின் இன்னொரு படம்!

சினேகன் –கன்னிகா தம்பதிகளுக்கு கமல்ஹாசன் வைத்த வித்தியாசமான பெயர்கள்!

2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா!

மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments