Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஹ்மானுடன் இரண்டு வருடங்கள் ஒன்றாக பயணித்தேன்

ரஹ்மானுடன் இரண்டு வருடங்கள் ஒன்றாக பயணித்தேன்
, புதன், 29 அக்டோபர் 2014 (09:59 IST)
காவியத்தலைவன் நவம்பர் 14 திரைக்கு வருவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் வசந்தபாலன். 
 
காவியத்தலைவன் சாதாரண கமர்ஷியல் படம் கிடையாது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இசைக்கு முக்கியத்துவம் தந்து வெளிவரப் போகும் படம். இந்தப் படத்துக்காக ரஹ்மானுடன் இரண்டு வருடங்கள் சேர்ந்து பயணித்தேன் என்றார்.
 
இந்தப் படத்தில் மொத்தம் 14 பாடல்கள். மறைந்த காவிய கவிஞர் வாலி, பா.விஜய், நா.முத்துகுமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் ரோடு ஷோ நடத்தி படத்தை புரமோட் செய்யவிருப்பதாகவும் வசந்தபாலன் தெரிவித்தார்.
 
நாடகம் பார்க்க தண்டோரா போட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியது போல் இந்தப் படத்தையும் தெருத்தெருவாக தண்டோரா போட்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil