Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் முறிந்து விட்டது : வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு

காதல் முறிந்து விட்டது : வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு

காதல் முறிந்து விட்டது : வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு
, புதன், 28 செப்டம்பர் 2016 (19:06 IST)
தன்னுடைய காதல் முறிந்து விட்டது என நடிகை வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
சினிமா உலகில் நடிகர், நடிகைகள் காதலிப்பது, பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுவதும் அடிக்கடி நடக்கும் விஷயம்தான்.  நடிகர் விஷாலும், சரத்குமாரின் மகளான வரலட்சுமியும் காதலர்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. 
 
ஆனாலும் நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்று விஷால் கூறி வருகிறார். 2017ம் ஆண்டு தன்னுடைய திருமணம் நடைபெறும் என்று விஷாலும் கூறியிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக, வரலட்சுமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் காதல் முறிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
 
அவருடைய பதிவில் “காதல் முறிவுகள் மோசமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒருவர் தன்னுடைய ஏழு வருட காதலை தன்னுடைய மேனேஜர் மூலம் என்னிடம் தெரிவித்துள்ளார். உலகம் எங்கே போகிறது. எங்கே காதல்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் விஷாலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இது அவராகத்தான் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
 
ஏனெனில், வரலட்சுமியின் தந்தை சரத்குமாரிடம், விஷால் மோதல் போக்கை நீடித்து வருவதால், அவர்கள் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரிச்சலுகைக்காக பெயர் மாறிய இங்கிலீஷ் படம்