Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா வீட்டுக்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் நான்… வனிதா விஜயகுமார் வருத்தம்!

vinoth
சனி, 12 ஜூலை 2025 (08:25 IST)
வனிதா விஜயகுமார் நடித்து இயக்கியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் வனிதா, அவரின் முன்னாள் கணவர் ராபர்ட், கிரண் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வெளியாகி விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றது.

இந்நிலையில் இந்த டிரைலரில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசையில் உருவாக்கப்பட்ட ‘சிவராத்திரி’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. தன்னிடம் அனுமதிப் பெறாமல் அந்த பாடலை பயன்படுத்தியுள்ளதாக வனிதா மேல் தற்போது இளையராஜா தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று இளையராஜா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்துப் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த வனிதா “சார், நான் இளையராஜா வீட்டில் ஒருத்தி போல இருந்துள்ளேன். ஜீவா அம்மா என்னிடம் அவரின் கப்போர்ட் சாவியையேக் கொடுத்து அதில் இருந்து நகைகளை எடுத்து அம்மனுக்குப் போட சொல்லியுள்ளார். அந்த வீட்டுக்கு நான் அந்த அளவுக்கு உழைத்துள்ளேன். அந்த வீட்டுக்கு நான் மருமகளாக சென்றிருக்க வேண்டியவள். இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது” என எமோஷனலாகப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments