Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:47 IST)
நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா. இன்று விஜயகுமார் தனது வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி தனது மகள் மீது போலீஸாரிடம் புகார் அளித்தார். 
 
விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக தெரிகிறது. 
 
குறிப்பிட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா வீட்டை காலி செய்யவில்லை. இது குறித்து விஜயகுமார் தரப்பு அவரிடம் கேட்ட போது இது எனது சொத்து, வீட்டை காலி செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
இதனால், வேறுவழியின்றி நடிகர் விஜயகுமார், தனது வீட்டில் வசிக்கும் மகள் வனிதா, வீட்டை காலி செய்யாமல் சொந்தம் கொண்டாடுவதாகவும், அவரை வீட்டில் இருந்து காலி செய்து தர வேண்டும் எனவும் புகார் மனு அளித்தார். 
 
இதனால், செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்க ஆலப்பாக்கத்தின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வனிதா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். 
 
நைட்டியில் நடுரோட்டில் நின்றுக்கொண்டு இவ்வாறு செய்தியாளர்களிடம் மோசமாக நடந்துக்கொண்டு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும், இந்த வாய்த்தகராறு குறித்து மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments