Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மவனே கண்டமாயிடுவான் - வாலு இரண்டாவது ட்ரெய்லர்

மவனே கண்டமாயிடுவான் - வாலு இரண்டாவது ட்ரெய்லர்
, ஞாயிறு, 28 ஜூன் 2015 (14:15 IST)
3 வருடங்களுக்குப் பிறகு சிம்பு நடித்த படமொன்று வெளியாகிறது.


 

 
இதோ அதோ என்று பல மாதங்களாக போக்குக் காட்டிய வாலு ஜுலை 17 வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். அன்றுதான் தனுஷின் மாரியும் வெளியாகிறது.
 
மாரி ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவரும் நிலையில், வாலு படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை சிம்பு வெளியிட்டுள்ளார்.
 
இதில் வரும் வசனங்கள் அனைத்தும் இளம் ரசிகர்களை கவரும்வகையில் உள்ளது.
 
'எத்தனை தல படம் பார்த்திருக்கோம்' என்றும், 'சொல்லி வைண்ணா அவன்கிட்ட, என்வழியில குறுக்கே வர்றான், மவனே கண்டமாயிடுவான்' என்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
 
ஆக்ஷன் கலந்த ரொமான்டிக் காமெடியாக படம் தயாராகியிருப்பதை இந்த இரண்டாவது ட்ரெய்லரிலிருந்து உணர முடிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil