Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை பட தயாரிப்பாளருக்கு திடீரென கிடைத்த 30 கோடி ரூபாய்: படக்குழு மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (21:00 IST)
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் ஹைதராபாத் மற்றும் சென்னை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் பிப்ரவரி முதல் வாரம் முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தை ஜீடிவி மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்து வந்த நிலையில் திடீரென ஜீடிவி இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து போனிகபூருக்கு பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால் சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தும்படி நிறுத்தும் நிலை ஏற்படுமோ? என அஞ்சப்பட்டது 
 
ஆனால் ‘வலிமை’ படத்தில் அஜீத் மற்றும் ஹெச்.வினோத் மீது நம்பிக்கை கொண்ட மூன்று விநியோகிஸ்தர்கள் தாமாகவே முன்வந்து போனிகபூரிடம் தங்களுக்கு ‘வலிமை’ படத்தின் தமிழக உரிமையை கொடுத்தால் ரூபாய் 30 கோடி அட்வான்ஸ் கொடுப்பதாக கூறினார்களாம். இதனை ஏற்றுக்கொண்ட போனிகபூர், அவர்களிடம் 30 கோடி ரூபாய் பெற்று படத்தை தொடர்ந்து தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்
 
போனிகபூர் பொருளாதார சிக்கலில் இருந்த நிலையில் திடீரென 30 கோடி ரூபாய் கிடைத்திருப்பது அவருக்கும் படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments