Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வெள்ளி, 6 ஜூன் 2025 (12:34 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த உரை புத்தகத்துக்கு “வள்ளுவர் மறை, வைரமுத்து உரை’ எனத் தலைப்பு வைத்துள்ளார். திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் கலைஞர் வரை பலர் உரை எழுதி இருந்தாலும் இன்னும் அதில் எழுதுவதற்கு விஷயம் உள்ளது என்பதால் இந்த புத்தகத்தை எழுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த புத்தகம் ஜூலை 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்?

சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?

முந்தையத் தோல்விகளை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை- விஜய் சேதுபதி கருத்து!

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனது ஏன்?- இயக்குனர் ஜீத்து ஜோசப் பதில்!

பறந்து போ மற்றும் 3BHK படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments