Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் - வைரமுத்து

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (20:37 IST)
தஞ்சையில் மன்னர் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலைக் கட்டினார். அக் கோயிலில், ஆகம விதிகளை காரணம் காட்டி தமிழ் இரண்டாம் மொழியாக இழிவுறுவதை தமிழ் பற்றாளர்கள் ஏற்க மாட்டார்கள். குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என வைரமுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்ட செய்தவர் தமிழ் மன்னன், கட்டியவர் தமிழ்ச் சிற்பி, கல்சுமந்தவர்கள் தமிழன் அதனால் கோயிலில் தமிழில் தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஆயிரமாண்டு காலமாக சிவனுக்கு தொடர்புடைய தமிழ், தஞ்சை பெருவுடையார் கோவிலின் கோபுரத்தில் ஏறமுடியவில்லை என தன் கருத்தை தெரிவித்து, தமிழில் ஓதினால் தமிழ் அறம் வேண்டுவோர்களில் ஒருவராக தானும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
 
இதில் முக்கியமாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற ஆணை அல்லது தீர்ப்பு வந்தால் தானும் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்குச் சென்று வழிபடுவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments