Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி நிலநடுக்கம்: கவிஞர் வைரமுத்துவின் உருக்கமான கவிதை..!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (18:36 IST)
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக சுமார் 5000 பேர் பலியாகியுள்ளதாகவும் ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் துருக்கி நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான இந்த நிலைக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டரில் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த கவிதை இதோ:
 
துருக்கியின் கீழே
பூமி புரண்டு படுத்துவிட்டது
 
ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன
 
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
 
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
 
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
 
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
 
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments