Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது: பிரணாப் மறைவு குறித்து வைரமுத்து கவிதை

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (18:54 IST)
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து கவிதை வடிவில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
 
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.
 
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.
 
பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.
 
போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை 
நீண்டகாலம் நினைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments