Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ புயலே போய்விடு: நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (09:58 IST)
தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் புயல் வரும்போது மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கி விட்டு தான் செல்கிறது. குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், பூம்புகார், சென்னை ஆகிய நகரங்கள் கடந்த ஆண்டுகளில் புயலால் பெரும் சேதங்களை சந்தித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு பெரும் சேதங்களை உண்டாக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் கவிஞர் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் சேதம் உண்டாக்காமல் போய்விடு புயலே என்றும் சுகமாய் கடந்து சுவாசம் ஆகிவிடு என்றும் கவிதை பாணியில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். இதோ அந்த கவிதை:
 
 
போ புயலே
போய்விடு
 
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
 
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
 
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
 
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
 
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
 
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments