Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ புயலே போய்விடு: நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (09:58 IST)
தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் புயல் வரும்போது மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கி விட்டு தான் செல்கிறது. குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், பூம்புகார், சென்னை ஆகிய நகரங்கள் கடந்த ஆண்டுகளில் புயலால் பெரும் சேதங்களை சந்தித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு பெரும் சேதங்களை உண்டாக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் கவிஞர் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் சேதம் உண்டாக்காமல் போய்விடு புயலே என்றும் சுகமாய் கடந்து சுவாசம் ஆகிவிடு என்றும் கவிதை பாணியில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். இதோ அந்த கவிதை:
 
 
போ புயலே
போய்விடு
 
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
 
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
 
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
 
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
 
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
 
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments