Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மனித முயற்சியா? இயற்கை நிகழ்ச்சியா? வைரமுத்து கவிதை

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (12:09 IST)
கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வைரஸ் எவ்வாறு தோன்றியது? இயற்கையாக தோன்றியதா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் மற்றும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் இன்னொரு பக்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் கொரோனா மனித முயற்சியா? அல்லது இயற்கை முயற்சியா? என்று கண்டறியப்படுவதைவிட அதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தான் உலக நாடுகள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து எழுதிய கவிதை இதோ:
 
கொரோனா நச்சுயிரி
மனித முயற்சியா இயற்கை நிகழ்ச்சியா
என்பதில் கருத்து வேறுபாடுண்டு.
ஆனால், மருந்து கண்டறிதல்
மனித முயற்சிதான் என்பதில் மாறுபாடில்லை.
உலக நாடுகள் முன்னதைவிடப் பின்னதற்கே
முன்னுரிமை தரவேண்டுமென்பது 
பேருலகின்  பெருவிருப்பம்
 
கவியரசு வைரமுத்துவின் இந்த கவிதை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments