Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய விருது - பாபி சிம்ஹா, உத்ரா உண்ணி கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது

தேசிய விருது - பாபி சிம்ஹா, உத்ரா உண்ணி கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது
, திங்கள், 4 மே 2015 (08:52 IST)
2014 -ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகராகவும், உத்ரா உண்ணி கிருஷ்ணன் சிறந்தப் பாடகியாகவும், நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 
 

 
மேலும், காக்கா முட்டையில் நடித்த இரு சிறுவர்கள் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகவும், ஜிகிர்தண்டா படத்தின் எடிட்டர் விவேக் ஹர்சன் சிறந்த எடிட்டராகவும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வென்றவர்களுக்கு விருதுகள் வழங்கினார். பாபி சிம்ஹா உள்பட அனைவரும் இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil