Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரை ஆந்திர முதல்வர் என்று பதிவிட்ட ஊர்வசி ரவுத்தேலா

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (21:31 IST)
பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தேலா தன் சமூக வலைதளத்தில் ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என்று பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிங் ஆப் தி கிரெட் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர், பாஜ் ஜானி, காபில், பகல்பந்தி, வால்டேட் வீரய்யா, முகவர், லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில் ஆந்திர மாநிலத்தில் தற்போது  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,    ஊர்வசி ரத்தேலா தன் டுவிட்டர் பக்கத்தில் பிரபல  நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணை ’’ஆந்திர முதல்வர்’ என்று பதிவிட்டுள்ளது அம்மாநில சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் மும்பை மையப்பகுதியில்  ரூ.190 கோடியில் பிரமாண்ட பங்களா   வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments