Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரப்பட்டு தவறான செய்தியை போட்டு மாட்டி கொண்ட பிக்பாஸ் ஆர்த்தி

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (11:18 IST)
பிக்பாஸில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்களில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலுருந்து வெளியே வந்த ஆர்த்தி தொடர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

 
பாடகி பி. சுசிலா உயிருடன் இருக்கும்போது அவர் இறந்துவிட்டதாக ட்வீட்டிய நடிகை ஆர்த்தியை நெட்டிசன்ஸ் விளாசியுள்ளனர். கானக்குயில் பி. சுசிலா இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. 
 
இந்நிலையில் சுசிலா அமெரிக்காவில் நலமாக உள்ளதாகவும், வதந்தியை நம்ப வேண்டாம் என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார். இதற்கிடையே நடிகை ஆர்த்தி அவசரப்பட்டுவிட்டார். ட்வீட்டில் இசை உலகின் கானக்குயில், கின்னஸ் சாதனையாளர் பி.சுசிலா அவர்கள் இறைவனடி சேர்தல், ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியை சுசிலா  அம்மாவின் உறவினர் அனுப்பினார் என்று ட்வீட்டினார் ஆர்த்தி.

 
இதனை பார்த்த நெட்டிசன்கள் அக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்துவதற்கு முன்பு எதையும் போஸ்ட் செய்யாதீங்க என்றும், எதுவாக இருந்தாலும் உறுதி செய்துவிட்டு போடுங்க என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments