Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படத்துக்கு யூ

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2015 (21:19 IST)
அருள்நிதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியிடப்பட்டன.
 
ஒரு ஊர். அங்கு எந்தப் பிரச்சனையுமே ஏற்படுவதில்லை. திருட்டு, கொள்ளை, அடிதடி எதுவும் கிடையாது. அதனால் அங்குள்ள போலீஸ்காரர்களுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை.
 

 
அதனால், அங்குள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் 4 போலீஸ்காரர்களையும் வேறு ஊர்களுக்கு மாற்றுவதற்கான உத்தரவு வருகிறது. நான்கு பேருக்கும் அந்த ஊரைவிட்டுப் போக விருப்பமில்லை. அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்றhல் காவல்நிலையம் செய்ல்பட வேண்டும். காவல் நிலையம் செயல்பட வேண்டும் என்றால் ஊரில் தவறுகள் நடக்க வேண்டும்.
 
நல்லா இருந்த ஊர் போலீஸ்காரர்களுக்கு வந்த மாற்றல் உத்தரவு காரணமாக நாசமானதாக மாறுகிறது.
 
சுவாரஸியமான இந்த கதையை படமாக்கியிருப்பவர் ஸ்ரீ கிருஷ்ணா. படம் சென்சார் உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் மனம் நிறைய சிரித்து யூ சான்றிதழ் தந்தனர்.
 
விரைவில் படம் திரைக்கு வருகிறது.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments