Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக திரைக்கு வந்து சில நாட்களேயான பாகுபலி-2 திரைப்படம் ஒளிபரப்பு!

இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக திரைக்கு வந்து சில நாட்களேயான பாகுபலி-2 திரைப்படம் ஒளிபரப்பு!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (17:48 IST)
இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் பாகுபலில் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த திரப்படம் திரையரங்குகள் வசூலை குவித்து வருகிறது.


 
 
ஏற்கனவே படம் ரிலீஸ் ஆன அன்றைய தினமே இணையத்தில் வெளியானது படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் பாகுபலி 2 திரைப்படத்தை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகுபலில் திரைப்படம் இணையத்தில் வெளியானாலும் படம் தரமுடன் இருப்பதால் தியேட்டரில் கூட்டம் குறைந்தபாடில்லை. பல்வேறு வசூல் சாதனைகளையும் முறியடித்து வருகிறது பாகுபலி 2. ஆனால் தமிழகத்தில் சில உள்ளூர் தொலைக்காட்சிகள் பாகுபலி 2 திரைப்படத்தை அனுமதியின்றி ஒளிபரப்பி வருகின்றனர்.
 
திருச்சியில் கிங் என்ற உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றும் பாகுபலி 2 திரைப்படத்தை ஒளிபரப்பி உள்ளது. இது குறித்து காவல்துறைக்கு புகார் சென்றதும் அவர்கள் விரைந்து வந்து அந்த கேபிள் ஆப்ரேட்டரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஒளிபரப்பு உபகரணங்களையும் கைப்பற்றினர்.
 
கிங் தொலைக்காட்சியின் உரிமையாளர் வாசிம் ராஜா இதனையடுத்து தலைமறைவாகியுள்ளார். அவர் மீது கேபிள் தொலைக்காட்சி பதிவுச்சட்டம் 1995, பதிப்புரிமைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments