Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷா - வருண் மணியன் பிரிவுக்கு என்ன காரணம்?

த்ரிஷா - வருண் மணியன் பிரிவுக்கு என்ன காரணம்?
, சனி, 2 மே 2015 (17:36 IST)
இந்த வருட தொடக்கத்தில் த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் தடபுடலாக நடந்தது. திருமணம் நடந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று த்ரிஷா கூறினார்.
 
வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் ஜெய் ஜோ‌டியாக த்ரிஷா நடிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால், அந்தப்பட வாய்ப்பை த்ரிஷா ஏற்கவில்லை. அதேநேரம் வேறு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
 

 
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பது என்ற த்ரிஷாவின் முடிவு காரணமாகவே இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டதற்கு காரணம் என்கிறார்கள். திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையிலேயே, தன்னுடைய சுதந்திரத்தை இழக்க வேண்டியிருந்ததால் த்ரிஷா வருண் மணியன் மீது அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது. 
 
திருமணம் தனது எந்த உரிமையையும் பறிக்கலாகாது என்ற த்ரிஷாவின் நியாயமான எதிர்பார்ப்புக்கும், வருண் மணியனின் எதிர்பார்ப்புக்கும் பொருந்திப் போகாததே திருமணம் நின்று போனதற்கு காரணம் என்கிறார்கள்.
 
த்ரிஷா தமிழில் மூன்று படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil