Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பன்றி காய்ச்சல் பீதி - முக கவசத்துடன் அலையும் த்ரிஷா

பன்றி காய்ச்சல் பீதி - முக கவசத்துடன் அலையும் த்ரிஷா
, புதன், 4 மார்ச் 2015 (11:38 IST)
பன்றி காய்ச்சலுக்கு இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்தி நடிகை சோனம் கபூரை பன்றி காய்ச்சல் தாக்கியதைத் தொடர்ந்து சினிமா நட்சத்திரங்களையும் பீதி ஆட்டிப் படைக்கிறது. பன்றி காய்ச்சல் சுகாதாரமில்லாத சேரிகளில் வாழ்கிறவர்களை மட்டுமே தாக்கும் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு சோனம் கபூர் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
த்ரிஷா தற்போது அப்பாடக்கர் படத்தில் நடித்து வருகிறார். காட்சி முடிந்ததும் த்ரிஷா, ஜெயம் ரவி என அனைவரும் முக கவசம் அணிந்து கொள்கின்றனர். பன்றி காய்ச்சல் பயம் காரணமாகதான் இந்த முக கவசம்.
 
த்ரிஷா முக கவசத்துடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டதைத் தொடர்ந்து பன்றி காய்ச்சல் பீதி தமிழகத்தில் இரு மடங்காகியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil