Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுந்தர் சி. இயக்கத்தில் அரண்மனை இரண்டாம் பாகம் - த்ரிஷா நாயகி

சுந்தர் சி. இயக்கத்தில் அரண்மனை இரண்டாம் பாகம் - த்ரிஷா நாயகி
, செவ்வாய், 5 மே 2015 (10:19 IST)
சுந்தர் சி. இயக்கிய முதல் பேய் படம், அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய், சுந்தர் சி., சந்தானம் நடித்திருந்த அரண்மனை பட்ஜெட்டைவிட பல மடங்கு லாபத்தை வசூலித்தது.
 

 
இந்நிலையில் அரண்மனை இரண்டாம் பாகத்தை சுந்தர் சி. எடுக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் த்ரிஷா நாயகி. இந்தத் தகவலை அவரே தனது பிறந்தநாளான நேற்று தெரிவித்தார்.
 
அரண்மனை இரண்டாம் பாகத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கிறது. ஹீரோவாக நடிப்பவர் சித்தார்த்.
 
திருமணம் நின்ற பிறகு த்ரிஷாவின் காட்டில் வாய்ப்பு மழை கொட்டுகிறது. அதில் ஒருதுளிதான், அரண்மனை இரண்டாம் பாகம்.

Share this Story:

Follow Webdunia tamil