Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷாவுக்கு இந்த மேட்டர் ரொம்பப் பிடிக்கும்

த்ரிஷாவுக்கு இந்த மேட்டர் ரொம்பப் பிடிக்கும்
, செவ்வாய், 29 ஜூலை 2014 (22:29 IST)
சிபிராஜும், சத்யராஜும் செய்திருக்கிற இந்த விஷயம் நடிகை த்ரிஷாவுக்கு ரொம்பப் பிடித்திருக்கும். அப்படியென்ன அப்பா, மகன் செய்தனர்?
 
மௌலிவாக்கம் கட்டிட விபத்தில் அறுபதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் அல்லவா? அந்த விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய நாய் ஒன்று காப்பாற்றப்பட்டு ப்ளூ கிராஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நாயை இன்று காலை வேளச்சேரி ப்ளூ கிராஸுக்கு வந்த சிபியும், சத்யராஜும் தத்தெடுத்துக் கொண்டனர். 
 
நாய் மாதிரி அடிபட்ட மனிதர்கள் பலர் இருக்க ஒரு நாயை ஏன் இவர்கள் தத்தெடுத்தார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்?
 
சத்யராஜ் தனது நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தனது மகன் சிபிராஜ் நடிக்கும் நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் சிபிராஜுக்கு இணையாக ஒரு நாயும் நடித்துள்ளது. அதனால்தான் மௌலிவாக்கம் நாயை அப்பாவும், மகனும் தத்தெடுத்தனர். எல்லாம் படத்துக்கு ஒரு விளம்பரம்தான்.
 
தெருநாய்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் த்ரிஷா. தெருநாய் ஒன்றை தத்தெடுத்து அதற்கு கேட்பரி என பெயர் வைத்து வளர்த்தும் வந்தார். சமீபத்தில் அந்த நாய் இறந்து த்ரிஷாவை மீளாத்துயரில் ஆழ்த்தியது. சிபிராஜ், சத்யராஜின் இந்த நாய் தத்தெடுப்பு நிச்சயம் த்ரிஷாவை கவர்ந்திருக்கும்.
 
சினிமாக்காரர்கள் இல்லையா. அதுவும் விளம்பரத்துக்காக நடத்திய தத்தெடுப்பு. நாய்கள் ஜாக்கிரதை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் மொத்தமும் ஆஜராகி தத்தெடுப்பை நிகழ்வை களைகட்ட வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil