கலை மீதான த்ரிஷாவின் பாசம் கன்னாபின்னாவென்று உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் கலை மீதான அவரது தாகத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதம், உண்மையிலேயே டெரர்.
சினிமாதான் என்னுடைய பலம். அதனால்தானோ என்னவோ, என்னுடைய திருமணம்கூட நின்று போய்விட்டது. என்னுடைய கர்ப்ப காலத்தில் மட்டும்தான் நடிப்புக்கு சற்று இடைவெளி விடுவேன். மற்றபடி, தொடர்ந்து நடிக்கத்தான் செய்வேன் என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
சினிமா தான் என்னுடைய உயிர் மூச்சு. நான் நடித்துக் கொண்டிருக்கும்போதே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் என்பதே எனது ஆசை என்று அந்தப் பேட்டியில் மொத்த ரசிகர்களையும் அதிர வைத்துள்ளார்.