Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் 'பேட்ட' நாயகிகள்!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (18:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' படத்தில் த்ரிஷா, சிம்ரன் ஆகிய இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், இருவரும் இணையும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்று த்ரிஷா, சிம்ரன் இருவர் மட்டுமின்றி ரசிகர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் ரசிகர்களின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் இருவரையும் இணைத்து ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றும் த்ரிஷா, சிம்ரன் இருவரும் இணைந்து ஒரு கிரிமினல் குற்றத்தை கண்டுபிடிப்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது.
 
'பேட்ட' படத்திற்கு முன் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான 'ஜோடி' படத்தில் சிம்ரனுக்கு தோழியாக த்ரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்கள் கழித்து மீண்டும் த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தை சுமந்த் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்… இது என்ன புதுசா இருக்கு!

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments