Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில் படத்தைத் திரையிட மறுத்த தியேட்டர் – பின்னணி என்ன ?

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (11:55 IST)
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரம்பா தியேட்டர் தீபாவளிக்கு பிகில் திரைப்படத்தை திரையிட மறுத்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ள முன்னணி திரையரங்கங்கள் பிகில் படத்தை திரையிட்டு வசூலை வாரிக்குவிக்கும் முனைப்பில் உள்ளன. கிட்டதட்ட அனைத்து திரையரங்கங்களும் பிகில் படத்தை திரையிட விரும்புகையில் திருச்சியில் உள்ள ரம்பா திரையரங்கம் மட்டும் பிகிலைத் திரையிட மறுத்துள்ளது.

திருச்சியில் உள்ள முன்னணி திரையரங்கமான அதை விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அவர்களின் இந்த முடிவைத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்குக் காரணம் ரம்பா திரையரங்கம் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பேரில் செய்யும் அலப்பறைகளால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் தியேட்டர் உள்ளேயும் ரசிகர்கள் ஆடல் பாடலின்போது இருக்கைகளை சேதப்படுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டே பிகில் படத்துக்குப் பதிலாக கைதி படம் திரையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

பரபர த்ரில்லர் ஸ்டைலில் DNA டிரைலர்… அதர்வாவுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்!

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments