Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்காரை நோக்கி பாகுபலி 2; அரசின் முயற்சி கைகொடுக்குமா?

ஆஸ்காரை நோக்கி பாகுபலி 2; அரசின் முயற்சி கைகொடுக்குமா?
, வெள்ளி, 5 மே 2017 (12:46 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகிய முன்னனி நடிகர்கள் நடித்துள்ள பாகுபலி 2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகின்றது.

 
அதிக சாதனைப்படைத்த இந்தி படங்களான தங்கல், சுல்தான் ஆகியவற்றின் சாதனையை முறியடித்துள்ளது. பாகுபலி  வெளியாகி 6 நாட்களில் ரூ. 750 கோடி வசூலித்துள்ளது. இது 1000 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உலகளவில் அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆகிய படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் பாகுபலி 2 படம் இணையும் என தெரிகிறது.
 
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தியாவுக்கே பெருமை சேர்த்த பாகுபலி 2 படக்குழுவினருக்கு பாராட்டு  விழா நடத்துவதோடு, ஆஸ்கருக்கு அனுப்ப மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பிரதீப் கொலை செய்யப்பட்டாரா? - போலீசார் விசாரணை