Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிக்கு மறுபடியும் ‘நோ’ சொன்ன வித்யா பாலன்

ரஜினிக்கு மறுபடியும் ‘நோ’ சொன்ன வித்யா பாலன்
, திங்கள், 8 மே 2017 (14:26 IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் நடிப்பதாக இருந்த புதிய படத்தில் இருந்து விலகியுள்ளார் பாலிவுட் நடிகையான வித்யா  பாலன்.
 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, இம்மாத இறுதியில் தொடங்குகிறது. மும்பை தாதா கதையில் ரஜினி நடிக்கிறார். இதற்காக, சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில், மும்பையின் தாராவி  பகுதி போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது. 
 
இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை வித்யா பாலன், ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவியது. அது  உண்மையாக இருந்தபோதும், படக்குழுவினர் வெளிப்படையாக அதை அறிவிக்கவில்லை. ஆனால், கால்ஷீட் குளறுபடி காரணமாக இந்தப் படத்தில் இருந்து வித்யா பாலன் விலகிவிட்டார். 
 
ஏற்கெனவே ‘லிங்கா’, ‘கபாலி’ படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கேட்டும், வித்யா பாலன் சம்மதிக்கவில்லை.  தற்போது, மூன்றாவது முறையாகவும் ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பைக் கைநழுவ விட்டிருக்கிறார் வித்யா பாலன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளவரசி நடிகைக்கும்.. வில்லன் நடிகருக்கும்... பத்திகிச்சு....