Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நல்ல ஆண்மகனை இதுவரை சந்திக்கவே இல்லை: அழகியின் வாக்குமூலம்

ஒரு நல்ல ஆண்மகனை இதுவரை சந்திக்கவே இல்லை: அழகியின் வாக்குமூலம்
, திங்கள், 21 நவம்பர் 2016 (15:07 IST)
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்ற இடத்தில் ஆட்சி செய்த சில்க் ஸ்மிதா, இதுவரை ஒரு நல்ல ஆண்மகனை சந்திக்கவே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


 

 
ரசிகர்கள் அனைவரையும் சொக்க வைத்த தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா கடும் மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் கவர்ச்சி நடிகை என்பதாலே, பலரும் இவரை அடைய முயற்சித்ததோடு, அடைந்தும் வந்தனர்.
 
ஜெமினி சினிமாவில் ஒரு முறை அளித்த பேட்டியில், தான் இதுவரை ஒரு நல்ல ஆண்மகனை சந்திக்கவே இல்லை என்று கூறினார். இது அவரது வாழ்க்கையின் நிலைமையை அழகாக எடுத்துரைக்கிறது.
 
இதுவே அவர் அளித்த கடைசி வாக்குமுலமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட வாழ்க்கை சூழலில் வாழ்ந்து, மனமுடைந்து இறுதியில் மரணமடைந்தார். இன்றும் நடிகைகளில் தற்கொலை சம்பவம் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் 9 வெளியாகும் தெலுங்கு தனி ஒருவன்