எட்டு வருடங்களுக்கு முன் மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா, மீண்டும் மிஷ்கினுடன் இணைகிறார்.
மிஷ்கின் விஷாலை வைத்து துப்பறிவாளன் என்ற படத்தை இயக்குகிறார். ராகுல் ப்ரீத் சிங் நாயகியாகும் இந்தப் படம் செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது.
இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் பிரசன்னா நடிக்கிறார். எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மிஷ்கின் படத்தில் நடிப்பதாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
த்ரில்லர் படமாக தயாராகும் இந்தப் படத்துக்கு அரோல் குரலி இசையமைக்க விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது.