Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் 3 நாயகிகள்: ஹீரோ இவர் தான்!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (07:59 IST)
வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ள வெங்கட்பிரபு அடுத்ததாக ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்
 
காமெடி மற்றும் ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டோ, ரியா சுமன் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் தான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் வெங்கட்பிரபு தரப்பினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments