மக்களை சிரிக்க வைத்த எனக்கு இந்த நிலைமை- பிரபல நடிகர் வேதனை!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (22:35 IST)
மக்களும் முதல்வரும் என் உயிரைக் காக்க உதவி செய்ய வேண்டும் என பிரபல காமெடி நடிகர் போண்டாமணி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரபல காமெடி நடிகர் போண்டாமணி. வடிவேலு குழுவினரோடு இணைந்து பல படங்களில் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியவர். 

இவர் சமீபத்தில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்காக சிகிச்சை பெற்று வந்த  நிலையில், அவரது இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்து விட்டதாக  நடிகர் பெஞ்சமின் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த  நிலையில், சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி, ஒரு பிரபல சேனலுக்குப் அவர்  பேட்டியளித்துள்ளார். அதில்,’’ ஒரு படத்தில்  நிஜ சாக்கடையில் குதித்ததால்தான்  முதலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, அதன் பின் பல பிரச்சனைகளைச் சந்தித்ததாகவும்,தற்போது இரண்டு இரண்டு சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் சிரிக்க வைத்த எனக்கு இந்த  நிலைமை வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  சினிமாவில் நடித்த நான் இதுவரை எனக்கென்று ஒன்றும் சேர்த்திவைக்கவில்லை என்றும்,  எனக்கு மக்களும், முதல்வர் ஸ்டாலினும் உதவி செய்ய வேண்டுமென  போண்டாமணி வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments