எங்களுக்குள் பெரிய சண்டை எதுவும் இல்லை. ஆனால் சிறு விசயத்திற்காக இப்படி செய்துக்கொண்டார் என சீரியல் நடிகை பவானி தனது கணவர் பிரதீப் தற்கொலை குறித்து கூறியுள்ளார்.
பிரபல சீரியல் நடிகர் பிரதீப் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மனைவி பவானியும் ஒரு பிரபல சீரியல் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
பவானி தனது கணவர் தற்கொலை குறித்து கூறியதாவது:-
எங்களுக்குள் பெரிய சண்டை எதுவும் இல்லை. ஆனால் சம்பவத்தன்று காலை சுமார் 2 மணி அளவில் வெளியே சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார். திரும்பி வந்தவர் காலையிலே மிக அதிகமாக குடித்துக்கொண்டிருந்தார். நான் அதிகாலையிலேயே ஷூட்டிங் சென்றுவிட்டேன். வீடு திரும்பியபோது அவர் இறந்து கிடந்தார். நான் அதிர்ச்சியடைந்தேன். சின்ன விசயத்திற்காக இப்பது செய்துக்கொண்டுள்ளார், என்றார்.