என்னுடைய நம்பிக்கை, அன்பு, சிரிப்பு எல்லாவற்றுக்கும் காரணம் இவர்கள்தான்: சவுந்தர்யா
என்னுடைய நம்பிக்கை, அன்பு, சிரிப்பு எல்லாவற்றுக்கும் காரணம் இவர்கள்தான்: சவுந்தர்யா
நேற்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தான் அவர்களுக்கு மகளாக பிறந்ததினால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த், லதாவுக்கு மகளாக பிறக்க ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் தினமும் சிரிக்க அவர்கள் தான் காரணம் என்று பெற்றோர் பற்றி பெருமையாக கூறியுள்ளார் சவுந்தர்யா. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது 32வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கணவரை பிரிந்து தனது மகன் வேத் கிருஷ்ணாவுடன் வசிக்கும் சவுந்தர்யா தனது பிறந்தநாள் அன்று பெற்றோரிடம் ஆசி வாங்கியுள்ளார். மேலும் அவர் தனது பெற்றோருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இவர்களுக்கு மகளாக பிறக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.
என்னுடைய நம்பிக்கை. என் அன்பு. நான் தினமும் சிரிக்க காரணமாக இருக்கும் என்னுடய பெற்றோர்கள் என்றும், என்னுடைய பெற்றோர்தான் சிறந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார்.