இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் தீனா. இவர் பல படங்களில் வில்லன் கேரக்டரில் அசத்தியிருந்தாலும் நிஜத்தில் ஒரு ஹீரோ செய்ய முடியாத அரிய செயலை செய்துள்ளார்
ராயபுரத்தில் உள்ள ஒரு ஏழைச் சிறுமிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலை. அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சிறுமியின் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் உடனடியாக களமிறங்கிய தீனா, அச்சிறுமியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து அந்த சிறுமிக்கு நிதியுதவி செய்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அந்த சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் தீனாவின் வேண்டுகோளை ஏற்று ஃபேஸ்புக் நண்பர்கள் அனுப்பிய தொகை தற்போது ரூ.38 லட்சத்தை தாண்டிவிட்டதாம். அதுமட்டுமின்றி தற்போது அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமாக இருக்கின்றார்.
இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள தீனா தனது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார். விஜய் பல படங்களில் நடித்து பெற்ற புகழை ஒரே ஒரு சிறுமிக்கு உதவி செய்து அவரை விட பலமடங்கு புகழ்பெற்று விளங்குகிறார் தீனா