Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் பாரதி ராஜா வீட்டில் திருட்டு - விலை உயர்ந்த பொருட்கள் அபேஸ் !

Webdunia
சனி, 26 அக்டோபர் 2019 (14:45 IST)
“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பல அற்புத படைப்புகளை கொடுத்து உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் அவரது இயக்கத்தில் பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ இப்படி பல்வேறு சிறப்பு படங்களை இயக்கியுள்ளார். 

 
மேலும் பல படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். இந்நிலையில் சென்னை மாம்பலத்தில்  உள்ள பாரதிராஜாவின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்களான ஐபோன், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடு போயிருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த புகாரின் பேரில்  போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் , இதற்கு முன்னர் நடிகர் பார்த்திபன் மாறும் இமான் அண்ணாச்சி ஆகியோர் வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments