Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா ஹீரோவை கைது செய்து போலீஸார் அதிரடி

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (19:08 IST)
கொச்சியில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா வைத்திருந்த  கதாநாயகன் மற்றும் கேமராமேனை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் கஞ்சா, பிரவுன் சுகர், கொகைன் போன்ற போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்குத் தகவல் தெரிந்தது.
 
இதனையடுத்து போலிஸார் மற்று போதைபொருள்  தடுப்புதுறையினர் அதிரடியாக சோதனை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் தற்போது மலையாள சினிமா படப்பிடிப்பு தளங்களில் போதை பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியதகவல் வந்தது.

இதையடுத்து ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தோனி கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கொச்சியில் உள்ள சினிமா படப்பிடிப்பு தளங்களில் சோதனை நடத்தினர். 
 
இதில் ’இந்த ஜமீலாண்டே பூவன்கோழி’ என்ற சினிமா படப்பிடிப்பு தளத்தில் நுழைந்த கலால்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 
 
அப்போது அறிமுக நாயகன் மிதுன்(25) பெங்களூரைச் சேர்ந்த விசால்வர்மா ஆகிய இருவரிடமும் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து  வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments