Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பில் நடந்த திகில் சம்பவம்: ஹரிஷ் கல்யாண் அதிர்ச்சி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (09:54 IST)
ஹரிஷ் கல்யாண், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் லடாக்கில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஏற்பட்ட திகில் அனுபவத்தை தனியார் இணைய  ஊடகத்துக்கு பகிர்ந்தார். நடிகர் ஹரீஷ் கல்யாண் கூறும்போது,
 
"சொர்க்கம் மாறி தெரியிற சில இடங்களுக்கு செல்வது சில ஆபத்தானதாக இருக்கும்.  கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்து இருக்கும். லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது அந்த மாதிரி ஒரு அனுபவம் எங்களுக்கு இருந்துச்சு.
 
ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்து முடித்தோம். திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும்  வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி  ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதிச்சிருந்தது. என்றார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments