Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி சினிமா, இசை கச்சேரிகளில் பாடுவதில்லை என பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (12:01 IST)
இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ். ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல  இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.

 
தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி.  பல பாடல்களைத்  தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே  திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் சினிமாவில் பாடினார். கடந்த ஆண்டு 10 கல்பனைகள் என்ற மலையாள படத்திலும் பாடினார்.
 
இந்நிலையில் மலையாள பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்துள்ள பாடகி ஜானகி, நான் வருகிற 28-ந்தேதி மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன். அந்த நிகழ்ச்சிதான் இசை உலகில் எனது கடைசி நிகழ்ச்சியாக  இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் நான், பங்கேற்க மாட்டேன். எளிய வாழ்க்கை வாழ  விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments