ஸ்டுடியோ கிரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட், வேந்தர் மூவிஸ் என மூன்று நிறுவனங்களிடம் அட்வான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன் முதலில் அவர்களுக்கு படம் செய்து தரவேண்டும் என்று ஒரு குடைச்சல் சில வாரங்கள் முன்பு கிளம்பியது. அந்த டார்ச்சர் காரணமாகத்தான் ரெமோ விழாவில் கண்ணில் தண்ணி வைத்தார் சிவகார்த்திகேயன்.
ஸ்டுடியோ கிரீனிடமிருந்து மட்டும்தான் அட்வான்ஸ் வாங்கினேன், அதனால் அவர்களுக்கு மட்டும் படம் நடித்துத் தருகிறேன் என்று சிவகார்த்திகேயன் சொன்னதை பஞ்சாயத்து ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்டுடியோ கிரீனுக்கு ஒரு படம், எஸ்கேப் ஆர்டிஸ்ட், வேந்தர் மூவிஸ் இருவருக்கும் சேர்த்து ஒரு படம் நடித்துத் தருவது என முடிவானது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன், சிவகார்த்திகேயனுக்கு எந்த அட்வான்சும் தரவில்லை, அவர் படம் நடித்துத்தர வேண்டும் என்று நான் கேட்கவும் இல்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அவரே அப்படி சொன்ன பிறகு அப்பீல் ஏது?
ஸ்டுடியோ கிரீனுக்கு மட்டும் ஒரு படம் நடித்துத் தருவேன் என்று பிரச்சனையை பைசல் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.