Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னைப்பற்றி கேவலமாக பேசிய சிம்புவுக்கு நன்றி: விஷால்

என்னைப்பற்றி கேவலமாக பேசிய சிம்புவுக்கு நன்றி: விஷால்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (11:48 IST)
நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. விஷால் தலைமையிலான பாண்வர் அணியும், சரத்குமார் அணியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணியினரும் செய்தியாளர்களை சந்தித்து எதிரணி குறித்து குற்றச்சாட்டுகளை தெளித்து வருகின்றனர். நேற்று முந்தினம் சிம்பு செய்தியாளார்களிடம் விஷால் குறித்து கடுமையாக விமர்சித்தார். இது குறித்து விஷால் பதில் ஏதும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.


 

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு ராதிகா மேடம் மேல தனிப்பட்ட கோபம் இல்லை. என்னை  'விஷால் ரெட்டி' என்று அவர் கூறியுள்ளார். நல்லது செய்யறதுக்கு சாதி, மதம்னு எந்த அடையாளமும் தேவை கிடையாது.

ராதிகா மேடத்துக்கு ஒரு உண்மை தெரியணும். நடிகர் சங்கத்தோட உண்மையான பேர் 'தென்னிந்திய நடிகர் சங்கம்'. அதிலேயே எல்லாம் அடங்கி இருக்கு. அடுத்து என்னை வாடா போடா என்று பேசிய தம்பி சிம்புவுக்கு என்மேல என்ன கோபமோ? அவரோட பேச்சைக் கேட்டு கோபமே வரலை. என்னைப்பத்தி கேவலமாக பேசிய சிம்புவோட சிறப்புரைக்கு நன்றிங்க. காரணம் தம்பியோட பேச்சுக்கு பிறகுதான் பாண்டவர் அணியோட வெற்றி இன்னும் பிரகாசம் ஆகியுள்ளது. எனவே இந்த வெற்றிக்கு உதவியுள்ள ராதிகா, சிம்புவுக்கு நன்றி என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil