Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ரஞ்சித்தின் சினிமாவில் மூழ்கி விட்டேன்’… இயக்குனர் சி எஸ் அமுதன் பாராட்டு!

vinoth
புதன், 21 ஆகஸ்ட் 2024 (08:13 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ஹவுஸ்ஃபுல்லாகி படம் வசூலில் கலக்கியது.

படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொடும் என சொல்லப்படுகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். அந்த வரிசையில் இப்போது தமிழ்ப் படம் இயக்குனர் சி எஸ் அமுதனும் இணைந்துள்ளார்.

அவரின் சமூகவலைதளப் பதிவில் “இயக்குனர் ரஞ்சித், சினிமா மீது வைத்துள்ள காதல்தான் ‘தங்கலான்’ படமாக வந்துள்ளது. அவரின் உலகத்தில் மூழ்கிவிட்டேன். நம் சமூகத்தை புராணங்களில் வரும் ராஜாக்களோ அல்லது ராணிகளோ உருவாக்கவில்லை, மாறாக மக்களின் வியர்வையும் ரத்தமும்தான் உருவாக்கியுள்ளது.  சிலக் காட்சிகள் அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுத்தன. படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments